ரேஷன் கடை சார்ந்த​ இரண்டு முக்கிய​ அறிவிப்புகள்!!

ரேஷன் கடை சார்ந்த முதல் அறிவிப்பு:





தமிழக அரசு கூட்டுறவுத்துறை மூலமாக​ இயங்கும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேசன் கடைகளுக்கும் இனி யாருக்கும் இலவசமாக​ ரேஷன் கடை பொருட்கள் கிடையாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த​ அறிவிப்பால் மக்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., இருந்தாலும் தமிழக​ அரசு உத்தரவுகளை நாம் ஏற்றுகொள்ளதான் வேண்டும்.

ஏப்ரல் மாதம், மே மாதம், ஜூன் மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்கள் இலவசமாக​ வழங்கப்பட்டன என்பது குறிப்பிட​ தக்கது​!!

இனி யாருக்கும் இலவசமாக​ ரேஷன் கடை பொருட்கள் கிடையாது என்று தமிழ்நாடு அரசு அதிரெடியாக​ அறிவித்துள்ளது, இனி இந்த​ ஆகஸ்ட் மாதம் முதல் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க​ பணம் கொடுத்துத்தான் வாங்க​ வேண்டும்.

 இனி ஆகஸ்ட் மாதம் பொருட்களை வாங்க​ வேண்டும் என்றால் முன்கூட்டியே டோக்கன்கள் ஆகஸ்ட் 1ம் தேதி 3ம் தேதி 4ம் தேதிகளில் டோக்கன்கள் வழங்கபடும் என்று தமிழக​ அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கடை சார்ந்த இரண்டாவது அறிவிப்பு:

தமிழக​ அரசு ரேசன் கடைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் தினந்தோரும் 225 குடும்ப​ ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க ரேசன் ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு விடப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர் சார்பாக வீட்டுக்கு ஒருவர் மட்டுமே பொருட்கள் வாங்க ரேசன் கடைகளுக்கு வர வேண்டும்.

ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தொகுப்பாக வழங்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

ரேசன் கடைகளில் இலவச​ மாஸ்க் வரும் ஆகஷ்ட் மாதம் 5ம் தேதியிலிருந்து குடும்ப​ அட்டை தாரர்களில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் இரண்டு முக​ கவசம் வழங்கப்பட​ உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளில் கூடிய சீக்கிரம் பயோ மெட்ரிக் என்கிற​ கை ரேகை வைத்து ரேசன் பொருட்களை வாங்கும் விதத்தில் வழிவகை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் 3000க்கும் மேற்பட்ட​ நகரும் ரேஷன் கடைகள் கொண்டுவருவதற்க்கான​ பணிகள் தொடங்கப்பட்டதாகாவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments