தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் தலையாரி, தண்டல்காரர் வேலைவாய்ப்பு 2020 | TAMIL NADU VAO ASSISTANT JOBS 2020 | NO EXAM | NO FEES TN GOVT JOBS
தமிழக அரசு மாவட்ட வாரியாக பல கிராமங்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டு வரும் கிராம உதவியாளர் தலையாரி, தண்டல்காரர் வேலைவாய்ப்புக்கான காலிபணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்க்கான விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தில் கிடைக்குமாறு வரவேற்க்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு நிரந்தர அரசு வேலைவாய்ப்பு
நேரடி நியமன பதவியின் பெயர் : கிராம உதவியாளர் ( தலையாரி, தண்டல்காரர் ) வேலைவாய்ப்பு 2020 (VAO ASSISTANT JOB)
தலையாரி, தண்டல்காரர் வேலைவாய்ப்பு 2020
மாதம் சம்பளம் : ரூ,11,100/- முதல் ரூ,35,100/- வரையும் சம்பள உயர்வு கிடைக்கும்
கல்வி தகுதி: 5-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் விண்ணப்பிக்கலாம், 5-ஆம் வகுப்புக்கு மேல் நீங்கள் படித்திருந்தாலும் தாரலமாக விண்ணப்பிக்கலாம்.
இதற தகுதிகள் :
1. மிதிவண்டி சைக்கில் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
2.தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்ப்பு:
01-07-2020 அன்று கணக்குப்படி மினிமம் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.
பொதுப்பிரிவு , BC,BCM,MBC,DNC,OC - 21 to 30
SC, ST, இதற பிரிவினர்: 21 to 35
மாற்றுதிறனாளிகள் முன்னால் ரானுவத்தினருக்கு வயது வரம்ப்பு கிடையாது.
இந்த வேலைவாய்ப்பு இரண்டு தாலூகா வட்டாச்சியர் அலுவலக கிராம பகுதிகளில் 17 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட மாவட்டம்:
திண்டுக்கள் மாவட்டம் - 16 Vacancy
கிராமம்:
1. Kujiliamparai-Village Assistant Job / செ.வெ.எண்:-20/2020 / நாள்:-14.10.2020
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் காலியாக உள்ள 9 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்தில் காலியாக உள்ள 9 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இடஒதுக்கீடு விபரங்கள் வருமாறு:
கருங்கல் கிராமம்- ஜிடி-பொது பிரிவு – (பொது) முன்னுரிமையுள்ளவர், வடுகம்பாடி கிராமம் – எஸ்.சி.(ஏ) – அருந்ததியர் (பெண்கள்)/ அருந்ததியர் (ஆதரவற்ற விதவை), திருக்கூர்ணம் கிராமம் – எம்பிசி/டிஎன்சி – முன்னுரிமையுள்ளவர்கள், குளத்துப்பட்டி கிராமம் – பிசி – (பிற்பட்ட வகுப்பினர் முஸ்லீம் நீங்கலாக) – (பொது) முன்னுரிமையுள்ளவர்கள், கூம்பூர் கிராமம் – ஜிடி – பொதுப்பிரிவு – முன்னுரிமையற்றவர்கள் (பெண்கள்)/(ஆதரவற்ற விதவைகள்), சின்னுலுப்பை கிராமம் – எஸ்சி – (பொது) முன்னுரிமையுள்ளவர்கள், தோளிப்பட்டி கிராமம் – எம்பிசி/டிஎன்சி – முன்னுரிமையற்றவர்கள் (பெண்கள்) /(ஆதரவற்ற விதவை), கரிக்காலி கிராமம் – பிசி-(பிற்பட்ட வகுப்பினர் முஸ்லீம் நீங்கலாக) – முன்னுரிமையற்றவர் (பெண்கள்) / (ஆதரவற்ற விதவை), ஆர்.புதுக்கோட்டை கிராமம் – ஜிடி – பொது பிரிவு – முன்னுரிமையற்றவர்.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குஜிலியம்பாறை வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் விண்ணப்பங்களை 02.11.2020-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என குஜிலியம்பாறை வட்டாட்சியர் திரு.எல்.சக்திவேலன் தெரிவித்துள்ளார்.
2.Nilakkottai-Village Assistant Job / செ.வெ.எண்:-17/2020 / நாள்:-12.10.2020
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இடஒதுக்கீடு விபரங்கள் வருமாறு:
மட்டப்பாறை கிராமம்- பொதுப்பிரிவு பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்கள், சித்தர்கள்நத்தம் கிராமம் – பிசி (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) – பொது – முன்னுரிமையுள்ளவர்கள், குல்லலக்குண்டு கிராமம் – பொது பிரிவு – பொது – முன்னுரிமையுள்ளவர்கள், விருவீடு கிராமம் – எஸ்சி – பொது –முன்னுரிமையற்றவர், மல்லணம்பட்டி கிராமம் – எம்பிசிஃடிஎன்சி – பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்கள், மாலையகவுண்டன்பட்டி கிராமம் – பிசி (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) – பொது –முன்னுரிமையற்றவர், குன்னுவாரன்கோட்டை கிராமம் – பொது பிரிவு – பொது –முன்னுரிமையற்றவர், கணவாய்பட்டி கிராமம் – எஸ்.சி., – பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும்பொழுது, பணியிடம் காலியாக உள்ள கிராமம் அல்லது 2 கிலோ மீட்டர் சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவில் தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில், காலிப்பணியிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த குறுவட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.
தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது. ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 22.10.2020-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நிலக்கோட்டை வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
OFFICIAL NOTIFICATION LINK:
Kujiliamparai-Village Assistant Job - Notification Link: Click Here
Nilakkottai-Village Assistant Job - Notification Link: Click Here
அப்ளிகேசன் பாரம் மாதிரி படிவம்: Click Link
Other 32 District Notification Link:Click Here
0 Comments